வெளிநாட்டு சதி காரணமாக மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது – தெலுங்கானா முதல்வர்

வெளிநாடுகளில் ஏற்படுத்தப்படும் சதியின் காரணமாக மேக வெடிப்பு ஏற்படுகிறது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் அங்குள்ள பத்ரசலம் அணையின் நீர்மட்டம் பல அடி உயர்ந்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது. கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து அவர் கூறுகையில் மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய, அரிதான நிகழ்வு ஆங்காங்கே தற்போது நடந்து வருகிறது. இந்த மேக வெடிப்பு சதியாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார். இவரின் பேச்சுக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *