குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்து விடும் – பிரதமர் நரேந்திர மோடி
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது குறுக்கு வழியில் ஓட்டு வாங்குவது எளிது. ஆனால், குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என கூறியுள்ளார்.
இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்க வேண்டும். நாட்டில், இந்த வகை அரசியல் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இது போன்றவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தது இல்லை. கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுத்தது கிடையாது.
எங்கெல்லாம் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறமோ, அந்த பணிகளை துவக்கி வைக்கும், நிர்வாக மாதிரியையும், அரசியல் கலாசாரம், வேலை கலாசாரத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளது. தியோகர், விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்ட வந்தேன். இன்று இதனை துவக்கி வைத்துள்ளேன்.
இந்தியா ஆன்மிகம், பக்தி மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. யாத்திரைகள், நம்மை சிறந்த தேசமாகவும், சமுதாயமாகவும் மாற்றியுள்ளது. தியோகர் ஜோதிர்லிங்கம், சக்தி பீடமும் உள்ளது. நீண்ட தூரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தியோகார் நகருக்கு வருகின்றனர் மோடி பேசினார்.