உத்தரகண்ட் மாநிலத்தில் சோகம்..!!  ஆற்றில் விழுந்த கார்..! 9 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் பெய்து  வரும் கனமழை காரணமாக நிலை தடுமாறி கார் ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பலியானவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தை  சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த உத்தரகாண்ட் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு குழுவினர் மீது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

11 பயணிகளில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்ததை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ராம்நகர் கோட்வார் சாலையில் அமைந்துள்ள கார்பெட் தேசிய பூங்காவின் தேலா மண்டலத்தில் இந்த விபத்து நடந்தது.மேலும் இது குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில் அதிகாலை 5 மணிக்கு கார்பெட் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் வந்துள்ளது.

அப்போது தேலா கிராமத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓடும் நீரில் கார் அடித்து செல்லப்பட்டது. குமாவோன் ரேஞ்ச் டிஐஜி நிலேஷ் ஆனந்த் பர்னியின் அறிக்கையின் படி இறந்த அனைவரையும் அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரு சிறுமி ராம்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *