தன் குட்டியை காப்பாற்ற தாய் யானை செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை செய்த செயல் தொடர்பான வீடியோ ட்விட்டரில் இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கே இருக்கும் நாகர்கடா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இடையே இருக்கும் ஆற்றை 10 க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் ஒன்றாக கடக்கும் போது குட்டியானை ஒன்று நீரில் மூழ்கி ஆற்றில் அடித்துச் செல்வது போல் சிக்கி கொண்டது.
இதனை கண்ட பின்னால் வந்த யானை ஒன்று, அந்த குட்டி யானையை தனது தும்பிக்கையால் பிடித்து இழுத்து காப்பாற்றியிருக்கிறது. பின்னர் தாய் யானையை கெட்டியாக பிடித்தபடியே அந்த குட்டி யானையும் ஆற்றை கடந்து மேலே ஏறியுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான வீடியோவை இணையவாசிகள் பார்த்து ரசிக்கப்பட்ட வருகிறது. இருப்பினும் வீடியோவில் கடைசி சில நொடிகள் குட்டி யானையை தாய் யானை காப்பாற்றியதா இல்லையா என்ற கேள்வியையும் இணைய வாசிகளிடையே கேட்கப்பட்டு வருகிறது.தன் குழந்தையைப் பாதுகாப்பதற்காக தன் உயிரை கூட பணயம் வைத்துள்ளது என பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.