இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு..!! அக்னிபாத் என்னும் புதிய திட்டம்..
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு முப்படைகளில் குறுகிய கால மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்ய போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இந்த குறுகிய கால வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கப்படும் மற்றும் நாட்டில் வேலைவாய்ப்பு பெருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது நிலையில் இந்த திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு வருடத்திற்கு முதல் வருடம் ரூ.4.76 லட்சம் ஊதியம் அளிக்கப்பட்டு இறுதி வருடம் ரூ.6.92 லட்சம் வரை இருக்கும் கூறப்படுகிறது. பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அவர்களின் விருப்பம், பணித் திறன் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்த நடவடிக்கை இருக்கும். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.