கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு!
கொரோனா பரவல் இரண்டாவது அலை நாடு முழுவதும் குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் கடந்த சில தினங்களாக கேரளாவில் புதிதாக ஜிகா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
இதுவரை 19 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 73 வயது பெண்மணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் நாட்டு மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது கேரளாவில் பரவி வரும் இந்த ஜிகா வைரஸ் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.