இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் மரணம்

ஆறுமுறை இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவரும் காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான வீரபத்திரசிங் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.
இவர், 1983 முதல் 2017 வரை ஆறுமுறை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும், ஒன்பது முறை எம்.எல்.ஏவாகவும், ஐந்து முறை எம்.பி யாகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது 87 வயதாகும் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று பாதித்து மீண்டிருந்தார். ஆனால், கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டிருந்தாலும் அவரது உடல் மோசமடைந்திருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று(8.7.2021) அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.