இந்தியாவில் பரவலாகக் குறையும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையினால் பாதிப்பு அதிகமாக இருந்தது. தினமும், நான்கு லட்சம் வரை பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனையடுத்து, தொற்று அதிகமாக உள்ள மாநிலங்களில் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், புதிதாக 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,10,410 ஆக உயர்ந்துள்ளது.
* புதிதாக 3,921 பேர் உயிரிழந்துள்ளனர்.
* நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,74,305 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,19,501 பேர் குணமடைந்துள்ளனர்.
* நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,62,947 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,73,158 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 25,48,49,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.