இறப்பைக் கூட கிண்டலடிக்கும் பாஜக நிர்வாகிகள்

சிபிஐஎம் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, தனது மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என  ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த பதிவில் தனது மகனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு, பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தனர். ஆனால், பாஜக தலைவர் மிதிலேஷ் திவாரி  சீதாராம் யெச்சூரியின் மகனின் இறப்பை கிண்டல் செய்வது போல் ஒரு கருத்தைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார்” என தெரிவித்துள்ளார். இறப்பைக் கூட கிண்டல் செய்ததற்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…