மேற்கு வங்கத்தில் அமைதியாக நடந்து வரும் 5 ஆம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.

நடைபெற்ற நான்கு கட்ட தேர்தலிகளிலும் தொடர்ந்து வன்முறை வெடித்து வந்தது. ஆனால், 4 ஆம் கட்டத் தேர்தலின் போது, வன்முறை அதிகமாகவே அதனைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய் துப்பாக்கிச் சூட்டில் 4 பொது மக்கள் இறந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் 5 ஆம் கட்டத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை, 36.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 ஆம் கட்ட தேர்தலின் போது, ஏற்பட்ட வன்முறையை போல் இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 48 மணிநேரத்துக்குப் பதிலான 72 மணிநேர பொது அமைதி அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…