தேர்தல் ஆணையம் நடுநிலையை உறுதி செய்ய வேண்டும் – ஸ்டாலின்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 4 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது, வன்முறை வெடித்தது.

வன்முறையை அடக்க முயன்ற மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதனை கண்டித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார்.

இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது என மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது. இதற்கு, ”தேர்தல் ஆணையத்தின் முடிவு  ஜனநாயக விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டது. 12 மணியளவில் காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணாவில் ஈடுபட உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது.ஆகவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, சார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *