பின்னோக்கி சென்ற ரயில்… பதறிப்போன பயணிகள்!

உத்தரகாண்டில் எதிர்பாராத விதமாக ஜனசதாப்தி ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி ஜனசதாப்தி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது குறுக்கே வந்த பசு மாடு ரயிலில் அடிபட்டதையடுத்து ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். அடிப்பட்ட ரயிலை மீட்பதற்காக ரயிலை பின்னோக்கி எடுத்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக ரயில் பின்னோக்கி சென்றுள்ளது. ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். ரயிலை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர், உடனடியாக கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, காதிமா அருகே ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சாலை மார்க்கமாக தனக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்ததையடுத்து, ரயில் ஓட்டுநர் மற்றும் கார்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…