தேர்தல் ஆணையம் அதிரடி! வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில், கடந்த 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கரவாகனத்தில் சிலர் எடுத்துச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலில், அது பயன்படுத்தப்படாத இயந்திரம் மற்றும் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இது, தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனை ஏற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92 இல் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…