12-ம் வகுப்பு மாணவியை அறிவாளால் வெட்டிய வாலிபரை போக்சோவில் கைது செய்ய கோரிக்கை
12-ம் வகுப்பு மாணவியை அறிவாளால் வெட்டிய வாலிபர் சோலையப்பனை போக்சோ சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் தேர்வு எழுதி விட்டு வந்த 12-ம் வகுப்பு மாணவியை சோலையப்பன் என்ற வாலிபர் காதலிக்க மறுத்த காரணத்தால் தலையில் அரிவாளால் பயங்கரமாக வெட்டினார் இதில் பலத்த காயமடைந்த மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சோலையப்பனுக்கு மாணவி குறித்து தகவல் அளித்த அதே கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் என்ற வாலிபரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், இரண்டு வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விஸ்வ தமிழ் கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் சுடலைமுத்து தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மாணவிகள், பெண்கள் பாதுகாப்பாக செல்ல தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்