வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள். உறவினர்கள் போராட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). வழக்கறிஞரான இவர் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு  வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முட்டாஞ்செட்டி பிரிவு அருகே இவரை பின் தொடர்ந்து வந்த மத்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற எருமப்பட்டி போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து உயிரிழந்த மணிகண்டனை கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து சக வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவ்வழியாக சென்ற நான்கு சக்கர வாகனங்களை மறித்து டயருக்கு அடியில் படுத்து புரண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *