காதல் திருமணம் செய்த மணமக்களை கொடூரமாக வெட்டிக் கொன்ற உறவினர்கள்
தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் 3 தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொன்ற இருவரையும் வெட்டிக் கொன்ற பெண்ணின் உறவினர்கள்.
தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் சேர்ந்த மாரிச்செல்வம் 24 வயதான இவர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஏபிசி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கார்த்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு கார்த்திகாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று கோவில்பட்டியில் வைத்து கார்த்திகாவும் மாரி செல்வமும் திருமணம் செய்து கொண்டனர்.
மாரி செல்வம் கார்த்திகா தம்பதியினர் முருகேசன் நகர் பகுதியில் உள்ள மாரி செல்வத்தின் வீட்டில் தங்கி இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் மாலை 6:00 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மாறி செல்வத்தின் வீட்டிற்கு உள்ளேயே புகுந்து இருவரையும் சரமாரியாக வெட்டி காதல் ஜோடியை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் செயல்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரிந்துள்ளனர் இந்த ஆறு பேரும் பெண்ணின் உறவினர்கள் என கூறப்படுகிறது.
இந்த இரட்டை கொலை சம்பந்தமாக முருகேசன் நகர் பகுதியே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நகர்ப்புற துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் புறநகர் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்