மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை

மனநலம் பாதிக்கப்பட்டு காது  கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே அரசனுர் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி வயது 57 இவருடைய உறவுக்கார பெண்ணான மனநலம் பாதிக்கப்பட்ட காது கேட்காத, வாய் பேச முடியாத பெண் சிவகங்கை நம்பிக்கை மனநலம் குன்றிய பள்ளி காப்பகத்தில் இருந்து வந்துள்ளார் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருகையில் முனியசாமி அந்த பெண்ணை வயல்வெளியிலும் அவருடைய வீட்டிலும் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

காப்பகத்தில் தங்கி இருந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது பெண் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை சிறப்பு பள்ளியின் ஆசிரியர் மூலம் செய்கை வழியாக கூறவே பெண்ணின் தாயார் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார். 

வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது வழக்கில்  இன்று சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது முனியசாமி மீது குற்றங்கள் நிரூபிக்கப்படவே அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசு நிவாரண தொகையாக மூன்று லட்ச ரூபாய் வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *