கார் டிக்கியில் வைத்து  ஒருவர் எரித்து கொலை.. பரபரப்பில் காவல்துறை

விளாத்திகுளம் அருகே காரில் வைத்து ஒருவர் எரித்து கொலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலை வைப்பாறு  கலைஞானபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில்  மாருதி ஷிப்ட் கார் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாகச் சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்து வந்த குளத்தூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்து கொண்டு இருந்த  தீயை அனைத்து காரை சோதனையிட்ட போது கார் டிக்கியில் பின்புறம் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம்  கிடப்பதை பார்த்த காவல் துறையினருக்கு அதிர்ச்சி இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கார் டிக்கியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டவர் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் காரின் பதிவு எண்ணை வைத்து  விசாரணை மேற் கொண்டதில்  எரிந்த கார் நாகஜோதி உடைய  கார்,

யாரேனும் கடத்தி வந்து காரில் வைத்து எரித்து கொலை செய்தார்களா?அல்லது கொலை செய்து விட்டு காரை எரித்தார்களா? இந்த கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். காட்டுப் பகுதியில் காரில் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *