மனைவிக்கு வாளால் வெட்டு, தடுக்க முயன்ற மாமியார் பலி… முதல் கணவரின் வெறிச்செயல்

முதல் கணவர் வெறிச்செயல்,  மனைவிக்கு வாளால் வெட்டு தடுக்க முயன்ற மாமியார் உயிரிழப்பு, கொழுந்தியா, மகளுக்கும் வெட்டு

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி&தமிழ்ச்செல்வியின் மூத்த மகன் மகாலட்சுமி (20). இவருக்கு செங்கல்பட்டைச் சேர்ந்த அருண் என்பவருடன் திருமணமாகி லாவண்யா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. அருணின் நடவடிக்கைகள் சரியில்லாததால் பேச்சுவார்த்தை மூலம் அவரை விட்டு விலகி விட்டு மதுரை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு மதுரை புதுரில் வசித்து வந்துள்ளார். 

தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.   சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குடிவந்துள்ளார். இன்று காலை வீட்டில் மகாலட்சுமி தனது தாயார் தமிழ்ச்செல்வி, சகோதரி உஷாராணி, குழந்தை லாவண்யா உடன் இருந்த போது முதல் கணவர் அருண் டூவீலரில் தனது இரு நண்பர்களுடன் வந்து தகராறு செய்துள்ளார். 

தகராறு முற்றியதில் மகாலட்சுமியை வாளால் வெட்டியுள்ளார். அதனை பார்த்த தமிழ்ச்செல்வி, உஷாராணி ஆகியோர்  தடுக்க முயன்ற போது அவர்களையும் மூவரும் சராமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்ச்செல்வி உயிரிழந்தார்., 

படுகாயமடைந்த மகாலட்சுமி, உஷாராணி, குழந்தை லாவண்யா ஆகியோர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

கொலை சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகாலட்சுமி குடும்பத்தார் குறித்து யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்தான் இங்கு குடிவந்துள்ளார். அருண் மற்றும் அவரது நண்பர்கள் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும், சுதர்ஷன் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *