அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; கணித ஆசிரியர் போக்சோவில் கைது 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி ஊராட்சி மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது..

இந்த பள்ளியில் 300 மாணவ,மாணவியர்கள் கல்வி பயின்று வரும்நிலையில் 8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு கணித பாடத்தின் ஆசிரியர் கோவிந்தராஜுலு(45) என்பவர் நடத்தி வந்துள்ளார்

கோவிந்தராஜுலு  வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுப்பதாக மாணவிகள் தரப்பில் வந்த புகாரை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சார்பில் ஒசூர் அனைத்து மகளிர் போலிசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது..

புகார் அடிப்படையில் ஒசூர் அனைத்து மகளிர் போலிசார் கணித ஆசிரியரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் தலைமறைவான நிலையில் போலிசார் கோவிந்தராஜுலுவை தேடி பிடித்து விசாரணை நடத்தியதில் பாலியல் சீண்டல்கள் கொடுத்தது உண்மை என தெரியவந்ததால் கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி தருமபுரி மாவட்ட கிளைசிறையில் அடைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *