மின் வேலியில் சிக்கி மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு..!
பள்ளிப்பட்டு அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு. விவசாய நிலத்தில் அமைத்த மின் வேலியில் சிக்கி இறந்ததை மறைத்து சடலத்தை கிணற்றில் வீசி தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முருகைய்யா என்பவரின் மனைவி சிட்டியம்மாள்(55). இவர்களுக்கு பிறந்த மூன்று பெண்களுக்கும் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகைய்யா இறந்து விட்ட நிலையில் வீட்டில் சிட்டியம்மாள் மட்டும் வசித்து வந்துள்ளார்.
இந் நிலையில் கிராமத்திற்கு அருகில் மூர்த்தி என்பவரின் விவசாய கிணற்றில் சிட்டியம்மாள் சடலம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு மூர்த்தி தெரிவித்துள்ளார்.தகவலின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சிட்டியம்மாள் இறப்பு குறித்து முருகைய்யா முதல் மனைவி மல்லீஸ்வரி மகன் சீனிவாசுலு மனைவி கிருஷ்ணவேணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், இறந்த சிட்டியம்மாள் என்பவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்தது வந்ததாகவும்,
கிராமத்திற்கு அருகில் இருவரும் ரகசியமாக சந்திக்க சிட்டியம்மாள் சாப்பாடு, பண்றிகறி எடுத்துச் சென்றுக் கொண்டிருந்த போது மூர்த்தி என்பவர் சாகுபடி செய்துள்ள வேற்கடலை பயிர் காட்டு பண்றிகள் நாசப்படுத்துவதை தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி சிட்டியம்மாள் இறந்த நிலையில் சடலத்தை கிணற்றில் வீசி இறப்பை திசை திருப்பி தற்கொலையாக சித்தரித்து இருப்பதாக புகார் செய்தார். பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.