அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஓட ஓட வெட்டி கொலை…!
செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கொலையாளிகளிடம் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான அதிமுக பிரமுகர் பார்த்திபன் இன்று அதிகாலை தமது வீட்டின் அருகே நடைபயிற்சி சென்ற பொது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பார்த்திபனை கொலை செய்ய முயன்ற போது தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைப்பயிற்சி செல்லும் போது பார்த்திபனை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வழி மறிக்க முயன்ற போது பார்த்திபன் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயற்சிக்கிறார்.
மற்றொரு இருசக்கர சக்கரவாகனத்தில் வந்த இருவர் மீண்டும் அவரை துரத்தி செல்கின்றனர். சிறிது நேரத்தில் பார்த்திபனை மர்ம கும்பல் வெட்டி சாய்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனங்களில் தப்பி செல்கின்றனர். முன்னாள் அதிமுக ஊராட்சிமன்ற தலைவரை ஓட ஓட துரத்தி சென்று வெட்டி கொலை செய்யும் இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.