66 வயது மூதாட்டியை நகைக்காக கற்பழித்து கொலை; 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது..!

மதுரை திருநகர் பகுதியில் 66 வயது மூதாட்டியை நகைக்காக கற்பழித்து தலையில் கல்லை போட்டு கொலை செய்த கொடூரன்: 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவருக்கு திருமணம் ஆகவில்லை 66 வயதான இந்த மூதாட்டி திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு திருநகர் மூன்றாம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரிக்கு பின்புறம் சாலை ஓரமாக உறங்கியுள்ளார்.

இன்று அதிகாலை தலையில் ரத்த வெள்ளத்துடன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு ஆய்வு செய்தனர் அப்போது இந்த பகுதியை வந்த தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர்தான் இந்த குற்றத்தை செய்ததாகவும் மூதாட்டியிடம் இருந்த நகையை திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு கற்பழித்து தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த அலெக்ஸ் என்பவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அலெக்ஸை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இறந்த முத்துப் பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நகை மற்றும் பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த கொடூரனை, சம்பவம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *