சொத்து தகராறில் 82 வயது தந்தையை அடித்து கொன்ற மகன் காவல் நிலையத்தில் சரண்…!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரில் வசித்து வருபவர் முத்துசாமி (வயது 82 )இவரது மகன் பெருமாள் (வயது 62) இந்நிலையில் முத்துசாமிக்கு கெங்கவல்லி பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது .இந்த நிலத்தை கடந்த சில   தினங்களுக்கு முன்பு முத்துசாமி வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலத்தை விற்பனை செய்த பணத்தை தனக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறி பெருமாள் தனது தந்தை முத்துசாமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .

ஆனால் முத்துசாமி நிலத்தை விற்ற பணத்தை மகனுக்கு தர முடியாது என கூறிவந்துள்ளார். இந்நிலையில் இன்று முத்துசாமி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற பெருமாள் வயதான தந்தை என்றும் பாராமல் இரும்பு கம்பியால் முத்துசாமியை தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்று அருகில் உள்ள வீரகனூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை அடித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

அதை தொடர்ந்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . மேலும் போலீசில் சரணடைந்த பெருமாள் மீது கொலை வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் பெருமாளை  ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சொத்துக்காக 82 வயது உடைய தந்தையைமுதியவர் என்றும் பாராமல் 62 வயதுடைய மகன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *