கேங்ஸ்டர் பட பாணியில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிகொண்ட இரு தரப்பு…!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளைஞர்கள் இரு தரப்பினர் இடையேயான தகராறு காரணமாக நான்கு பேருக்கு கத்தி வீச்சு, ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கத்தி வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தில் இருந்து களியனூர் செல்லும் சாலையில் சுபாஷ் நகர் பகுதியில் நேற்று அக்ரஹாரம்-ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர், அதில் ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கத்தியால் வெட்டியதில் ஆவத்திபாளையத்தை சேர்ந்த பாலகன், பிரதீப் குமார்,நவீன் குமார் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு பலத்த காயமடைந்தனர். 

இதையடுத்து காயமடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் 108ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் பாலகன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

இதற்கிடையே திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் பள்ளிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இரவு இரு தரப்புக்கும் இடையே கை தகராறு ஏற்பட்டுள்ளது., அதன் தொடர்ச்சியாக தனியாக இருந்த இளைஞர்கள் மீது மற்றொரு தரப்பு இளைஞர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும் தனிப்படையை சேர்ந்த போலீசார் கத்தி வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழாவில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட சிறிய தகராறு கத்தி வீச்சு சம்பவத்தில் முடிவடைந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் காரணமாக 3 இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *