ஓடிபி நம்பர் கேட்டு பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் திருட்டு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் இவர் கூலி வேலை செய்து வருகின்றார் இந்த நிலையில் முத்தம்மாளின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது அதில் முத்தம்மாளிடம் பேசிய நபர் தாங்கள் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் ஏற்ற வேண்டும் அதற்கு உங்கள் செல்போனுக்கு ஓடிபி நம்பர் வரும் அந்த எண்களை சொல்லுமாறு கேட்டுள்ளனர்
அதனை நம்பி அவரது செல்போனிற்கு வந்த ஓடிபி நம்பரை அந்த நபரிடம் கூறியுள்ளார் இதனை அடுத்து சற்று நேரத்தில் அவரது செல்போனிற்கு முத்தம்மாளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வங்கிக்கு சென்று விபரம் கேட்டுள்ளார்
அப்பொழுது அவரது வங்கி கணக்கில் இருந்து 15 ஆயிரத்து 699 ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது இதனை அடுத்து முத்தம்மாள் தனது பணத்தை மீட்டு தர கோரி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.