பாலியல் வன்முறை செய்து 6 வயது சிறுவனை படுகொலை செய்த கொடூர நபர் கைது…!
தருமபுரி அருகே. ஆறு வயது சிறுவனை கட்டி போட்டு ஆசன வாயில் உறவு கொண்ட காம கொடூர இளைஞன் கைது.. தருமபுரி மாவட்டம் புளுதிக்கரை ஊராட்சிக்குட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் சுதா தம்பதியின் மகன் மதியரசு(6) கடந்த 16.7.23 மாலை 6.30 மணியளவில் மாயாமானார்,
இந்த நிலையில் அதே கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஒன்றில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான், இது தொடர்பாக உறவினர் ஒருவரின் மகனான பிரகாஷ்(19) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பிரகாஷ் போலீசில் கொடுத்த வாக்குமூலம் திடுக்கிட வைத்திருக்கிறது..
சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கை கால்களை ஒயரால் கட்டிபோட்டு ஆசன வாயில் கொடுரமாக உறவு கொண்டதாகவும், இந்த விபரத்தை வெளியே தெரிவித்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் சிறுவனை கொலை செய்து குடிநீர் மேல்நிலை தொட்டியில் போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியதாக தெரிவித்திருக்கிறான் காம கொடூர இளைஞன் பிரகாஷ்..
சிறுவன் மதியரசு தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான்.. கடந்த 16.7.23 ம்தேதி வீட்டருகே விளையாட சென்ற நிலையில் காணாமல் போகவே, சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்..
குடிநீர் தொட்டிக்குள் சிறுவன் சடலாமாக கிடந்தது எப்படி ? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது, ஒருவர் மட்டுமே கொலை செய்திருக்க முடியாது, வேறு யாரோ உடனிருந்திருக்க வாய்ப்பிருக்கிறது, அவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களையும் கைது செய்ய வேண்டுமென கூறி கொலையான மதியரசுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணாபுரம் காவல்நிலையம் முன்பு திடிரென சாலை மறியலில் ஈடுபட்டாதல் பரபரபபு ஏற்பட்டது,
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியில் கைவிடப்பட்டிருக்கிறது.. சிறுவன் கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவம் தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என விசாரணையை தொடர்ந்துள்ளனர்