கழுத்தில் காயங்களுடன் மர்மமாக இறந்து கிடந்த வட மாநில சிறுவன்… 

சூலூர் அருகே முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த வட மாநில சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கலங்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தன் மனைவி கைரோன் மற்றும் 7 வயது மகன் கைரோல் இஸ்லாமுடன் தங்கி வேலை செய்து வருகிறார். சிறுவனான கைரோல் இஸ்லாம் மில்லில் தங்கியுள்ள சிறுவர்களுடன் தினம்தோறும் விளையாடுவது வழக்கம், 

இந்நிலையில் நேற்று மாலை கைரோல் இஸ்லாம் உடலில் காயங்களுடன் மில் அருகே உள்ள காட்டில் பிணமாக கிடப்பதாக  மில்லில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் சிறுவனின் தந்தை ஜாகிர் உசேனிடம் தெரிவித்துள்ளனர். ஜாகிர் உசேன் பதறி அடித்துக் கொண்டு அங்கு சென்று பார்த்தபோது முகத்தில் காயங்களுடன் சிறுவன் இறந்தநிலையில் பிணமாக கிடந்துள்ளார்.  

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *