சரக்கில் சயனைடு கலந்து 2 பேரை கொலை செய்த இருவர் கைது….!

மயிலாடுதுறை அருகே உள்ள மங்கைநல்லூர் தத்தங்குடியில் கொல்லன்பட்டறை வைத்து நடத்திவந்த  பழனிகுருநாதன்(55).  . இவரிடம் வேலை பார்த்துவந்த   பூராசாமி என்பவரும் 12ஆம் தேதி மாலை பட்டறையில் மது அருந்திய நிலையில் இறந்துகிடந்தனர்.  அவர்களது  சடலத்தை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த இடத்தில்  காலிபாட்டில் மற்றும் சரக்குடன்   மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பினர், மதுபாட்டில் சோதனை அறிக்கையில் சயனைடு விஷம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே மதுவால்தான் இந்த சாவு என்று அதைக் கண்டித்து மயிலாடுதுறை திருவாரூர் சாலை மங்கைநல்லூரில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்டிஓ யுரேகா பேச்சுவார்த்தையில் உடல்கூறு ஆய்வு அறிக்கை வந்ததும் மதுவால் இந்தசாவு நடந்திருந்தால் உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்தால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இறந்துபோன இருவரது குடும்பத்தாருக்கும் திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கினார்.  உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு இருவரது உடல்களும் மங்கைநல்லூர் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள செய்தி அறிக்கையில், இருவரது உடற்கூறு ஆய்விலும் சயனைடு விஷத்தால்தான் அவர்களது சாவு நடைபெற்றது என்றும்  ஏற்கனவே சந்தேக மரணமாக பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்,

போலீசார் தீவிர விசாரணையில் பழனிகுருநாதன் இரண்டாம்தார மகன் என்றும் முதல்தார மகன்கள் மனோகர் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் சொத்து தகராறில் கோபப்பட்டு கொலை செய்துள்ளதாக  தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  . என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருவருக்கும் சயனைடு கொடுத்த பொற்கொல்லர் மற்றும் கடை உரிமையாளரையும் போலீசார் விசாரித்துவருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *