8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோவில் கைது…!

கைது

விருத்தாசலம் அருகே  8-ம் வகுப்பு தேர்வு எழுதிய பள்ளி மாணவியை 5 மாதம் கர்ப்பம் ஆக்கிய வாலிபர் போக்சோவில் கைது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சர்க்கர மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அவரது 13 வயது மகள் கருவேப்பிலங்குறிச்சி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார் இந்த நிலையில் அவரது மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது  அவரது உறவினர் கருவேப்பங்குறிச்சி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரிடம் காட்டியுள்ளனர் அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது 

பின்னர் மருத்துவர் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர் இது குறித்து விருத்தாசலம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த தங்கசாமி அவரது மகன் ஆனந்தராஜ் வயது 33 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் 

இந்த நிலையில் ஆனந்தராஜ் குழந்தையை சிறுமி தூக்கி வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்  கடந்த 04.12.2022 அன்று சிறுமி ஆனந்தராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார் அப்பொழுது குழந்தைகள் எங்கே என்று கேட்டுள்ளார் ஆனந்தராஜ் ஊருக்கு சென்று உள்ளனர்  என்று கூறி சிறுமையை இழுத்துச் சென்று  அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது இதனை யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார் 

இந்த நிலையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில்  விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய குற்றத்திற்க்கு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *