எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு… பரபரப்பில் போலீசார்…!
கோவை காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையில் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சிறிய அறை உள்ள பகுதியில் பெண் ஒருவர் எரிந்து நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பொது மக்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த தடயவியல் துறையின் ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த பெண் யார்? எதற்காக இங்கு வந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.