கலாஷேத்ரா நடனப்பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

கலாஷேத்ரா நடனப்பள்ளி உதவி ஆசிரியர் பாலியல் புகாரில் கைது மாதவரத்தில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா நடன பள்ளி பாலியல் புகார் தொடர்பாக கேரளாவை சேர்ந்த அப்பள்ளியின் 2019 ஆம் ஆண்டு நடனம் பயின்ற முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றினை அளித்தார். 

இந்த புகாரில் தான் நடனம் பயின்ற பொழுது நடன பள்ளி உதவி ஆசிரியர் ஹரிஷ் பத்மநாபன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குறிப்புகள் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் புகார் அளிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நடனப்பள்ளியின் உதவி ஆசிரியர் ஹரிஷ் பத்மநாபன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும் படியும் சமன் அனுப்பிய நிலையில்  ஆஜராகாததால் ஹரி பத்மநாபனின் போலீசார் தேடி வந்த நிலையில் மாதவரத்தில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மநாபனை போலீசார் கைது செய்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்,

கைது செய்யப்பட்ட ஹரிஷ் பத்மனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *