வாய் தகராறு.. வாய்க்கா தகராறாய் மாறி கத்திகுத்தில் முடிந்த கொடூரம்…!
தேவாரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரு சக்கரத்தை வாகனத்தில் வந்த இருவருக்கு ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் பேனா கத்தியால் குத்தியதில் – ஒருவர் படுகாயம் ஒருவர் உயிர் ஊசல் போதையில் இருந்த குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை
போடி திருமலா புரத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா 46 இவர் தனது இருசக்கர வாகனத்தில் நீதிமன்றம் சாலையில் வந்து கொண்டிருந்தார் இதேபோன்று போடி அருகே கரட்டு பட்டியைச் சேர்ந்த பொம்முலு சாமி தனது இருசக்கர வாகனத்தில் போடி நோக்கி வந்தபோது போடி -தேவாரம் சாலையில் வளைவில் இருவரும் இருசக்கர வாகனம் இடிக்கும் அளவில் வாகனத்தை நிறுத்தினர் ஏன் பதறம வளைவில் திரும்ப வேண்டியதுதானே என கூறி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றிய நிலையில்
பாரதிராஜா தனது இருசக்கர வாகன சாவிகள் மாட்டியிருந்த பேனா கத்தியால் பொம்மலு சாமிகழுத்தில் குத்தியுள்ளார் இதை பார்த்து அருகில் உள்ள கடையில் வேலை பார்க்கும் போடி விசுவாசபுரத்தைச் சேர்ந்த பசும்பொன் 21 பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் கத்தியால் குத்தினீர்கள் என கேட்டபோது அவரை கன்னத்தில் கத்தியால் கிழித்துள்ளார் இருவரும் காயம் அடைந்த நிலையில் அப்படியே பாரதிராஜா இருசக்கரவனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்
வழியாக சென்ற அக்கம் பக்கம் தினர் காயம் அடைந்த இருவரையும் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் அறிந்த நகர் காவல் துறை ஆய்வாளர் ராமலட்சுமி பாரதிராஜாவை வீட்டில் வைத்து கைது செய்தனர்
சம்பவத்தால் பசும்பொன் கண்ணத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் – கான விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கழுத்தில்கத்தி குத்து காயம் ஏற்பட்ட பொம்முலு சாமி உயிர் ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் கானா விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து காவல்துறையினர் பாரதிராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்