பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த நபரை கொத்தாக தூக்கிய போலீசார்…!

வாலிபரை பிடித்த போலிஸார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை கோவையில் சமீபத்தில் சத்திய பாண்டியன், கோகுல் என்ற இரண்டு ரவுடிகள் அடுத்தடுத்த நாளில் படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் நீதிமன்ற சாலையில் கொல்லப்பட்டார். ரவுடி சத்தியபாண்டியன் ஆவாரம்பாளையம் பகுதியில் துரத்தி துரத்தி வெட்டி, சுட்டு கொல்லப்பட்டார் . இந்த நிலையிலே கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரவுடிகளின் கொலை பின்னணியில் உள்ள கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் கைதான ரவுடிகளிடம் விசாரணை நடந்தன. 

விசாரணையில் சில ரவுடிகள் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு வன்மம் கக்கியதாக தெரியவந்தன. இந்த நிலையிலே சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரை பிடிக்க, போலிஸார் திட்டமிட்டிருந்தனர். தனிப்படை போலீசார் விசாரணையில் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட, முதல் தேடுதல் வேட்டையில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையிலே பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டிருந்த பெண் தமன்னா என்கிற வினோதினி போலிஸாரால் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் சமூக வலைதளத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கோவை மாற்றம் பாளையம் பகுதியைச் சார்ந்த கௌதம் என்ற வாலிபர் பயன்படுத்தி வரும் சமூக வலைதள பக்கத்தில் பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவிட்டு இருப்பதை போலீசார் பார்த்திருக்கின்றனர். சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த வீடியோவை பார்த்த போலீசார், வாலிபர் கௌதமை பிடித்து  குனியமுத்தூர் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *