100 கோடி, சூப்பர் மார்க்கெட் ஆசைகாட்டி 50 லட்சத்தை ஆட்டயப்போட்ட கும்பல்…!

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் உமர் என்பவருக்கு சூப்பர் மார்க்கெட் வைப்பதற்காக 100 கோடி ரூபாய் கடன்  வாங்கித் தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர் மற்றும் சென்னையைச் சேர்ந்த அவரது நண்பர்கள் ராமலட்சுமி ஜெயசீலன் ஆகியோர் உமரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சென்னை சிட்டி குற்றப்பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த ஆறு மாத காலமாக ஊராட்சி மன்ற தலைவர் பன்னீரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ராமலட்சுமி ஜெயசீலன் ஆகிய இருவரை ஏற்கனவே சென்னை சிட்டி க்ரைம் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பன்னீர்செல்வம் மட்டும் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தொடர்ந்து சென்னை சிட்டி குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை சிட்டி குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையில்  25 பேர் கொண்ட குழுவினர் ஆலங்குடியில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு என ஏழு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *