காதலுக்கு இடையூரான கணவனை மிளகாய் பொடி தூவி கொலை செய்த கொடூர மனைவி…!

வேலம்பட்டி அருகே காதலுக்கு இடையூராக இருந்த கணவனை மிளகாய் பொடி தூவி  காதலன் உதவியுடன் தீர்த்து கட்டிய மனைவி.. காதல் செய்து கணவனாக கரம் பிடித்த நிலையில்,  காதலன் உதவியுடன் கனவனை தீர்த்து கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் கந்தன் என்பவருக்கும், கமக்காலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். 

இவர்களுக்கு சந்திஸ், சர்வேஸ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கந்தன் டிரைவராக வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் அடிக்கடி வண்டிக்கு வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில் கணவனின் அன்பு கிடைக்காமல் பாசத்துக்கு ஏங்கிய நிலையில் சந்தியாவுக்கு பால் பாக்கெட் வாங்கி கொடுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிவசக்தி என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில் சந்தியா சிவசக்தியுடன் சந்தித்து பேசி வந்தனர். 

பின்னர் கந்தன் மனைவியின் நடத்தையில் சந்தேகித்து கண்காணித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது மனைவின் செல்போனை பிடுங்கி பார்த்தபொழுது சிவசக்தி இடம் சந்தியா whatsapp ல் பேசி வீடியோ கால் பேசியது தெரியவந்தது. இதனால் கணவன் மனைவியையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கந்தன் வண்டி டிரைவராக செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற நிலையில் கணவன் வீட்டில் இல்லை என அறிந்த சந்தியா அவரது காதலன் சிவசக்தியை வீட்டிற்கு அழைத்துள்ளார். 

இந்நிலையில் கந்தன் வண்டிக்கு செல்லாமல் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் சிவசக்தி இருந்ததை கண்ட கந்தன் மனைவியுடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கந்தன் அவரது மனைவியை தாக்கிய நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சிவசக்தி மற்றும் சந்தியா சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை கந்தனின் கண்ணில் தூய்வியுள்ளனர். பின்னர் வாயை இருக்க மூடி சிவசக்தி மற்றும் சந்தியா இருவரும் பலமாக தாக்கி உள்ளனர். 

வீட்டிலிருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியின் மூலம் நெஞ்சு மட்டும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளனர். கந்தனின் மார்பு பகுதியில் சுமார் 25 இடங்களுக்கு மேல் குத்தியுள்ள நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கந்தன் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார். இதில் இதனை சந்தியா தண்ணீர் ஊற்றி வீட்டில் உள்ள இரத்த கரைகளை கழுவி விட்டு கந்தனின் நண்பரான வசந்த் என்பவரை உதவிக்கு அழைத்து  கந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் உதவி கேட்டுள்ளார். 

இது குறித்து தெரியாத வசந்த் அவரை காவேரிப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்த்துள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறிய நிலையில் அங்கிருந்து போலீசாருக்கு தகவல் அளித்த கந்தனின் நண்பர் வசந்த், கந்தனின் மனைவி மற்றும் அவரது கள்ளகாதலனான சிவசக்தி இருவரது செல்போனையும் பிடுங்கி போலீசார் வரும் வரை சந்தியாவை பிடித்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் கந்தனின் மனைவி சந்தியா, அவரது காதலன் சிவசக்தி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில் கனவனை காதலன் சிவசக்தி உதவியுடன் தனது கணவனை கொலை செய்தது தெரியவந்தது.  மேலும் கந்தனின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கணவனாக கரம் பிடித்த நிலையில் காதலன் உதவியுடன் கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *