ராஜகோபாலனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

சென்னையில் உள்ள தனியார் பள்ளியான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் புகாரளித்திருந்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தத்தைத் தொடர்ந்து ராஜகோபலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ராஜகோபாலனி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது. ஆனால், 3 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும், ஜுன் 3 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.