கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட ஆசாமிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. ஆறு பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவரின் அந்தரங்க உறுப்பில் பாட்டிலைச் சொருகி சித்திரவதையும் செய்துள்ளனர்.
மேலும், இவை அனைத்தையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். இது வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், அந்த ஆறு பேர் கொண்ட கும்பலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், பணப் பிரச்சனையில் அப்பெண்ணை சித்திரவதை செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆறு பேரையும் கைது செய்த காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த 6 பேரும் மீதும் பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் துறையினர் தெரிவித்தனர்.