ரவீந்திர ஜடேஜா பாஜக தொண்டர்! -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது தோனி தலைமையிலான சென்னை அணி. இந்த நிலையில் பாஜக தொண்டர் ரவீந்திர ஜடேஜாவால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜாவுக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.குஜராத் அணியின் முக்கிய வீரரான சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்தியதோடு, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியை வெற்றிகரமாக முடித்து தோனியின் பட்டாளத்திற்கு வெற்றியை ஜடேஜா தேடிக் கொடுத்தார். ஐபிஎல் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தியதை அரசியல் விவாதத்திற்கும் பொருள்படுத்தி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

கடந்த பிளே ஆஃப் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜாரத் டைடன்ஸ் அணி வந்து விளையாடிய போது தோல்வி கண்டது. அப்போது சென்னைக்கு வந்து குஜராத்தால் கால் பதிக்க முடியாது என அரசியல் கலந்து பலரும் இந்த வெற்றியை கருத்து சொன்னார்கள். இந்த நிலையில், சென்னை அணி மீண்டும் குஜராத் அணியை வீழ்த்தியது பற்றி இவ்வாறான கருத்துக்கள் நெட்டிசன்களால் தெறிக்க விடப்படுகின்றன.இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெற்றிக்கான ரன்னை அடித்தவர் ஒரு பாஜக தொண்டர். ஜடேஜாவின் மனைவி பாஜக எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். தமிழனாக பெருமை படுகிறேன். ஆனால் சிஎஸ்கே அணியை விட குஜராத்தில் தமிழர்கள் அதிகம் இருந்தார்கள் அதையும் கொண்டாடனும். சி.எஸ்.கே அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது பாஜக தொண்டர் என்பதில் பெருமைப்படுகிறோம். அதேதான் 2024 ல் தமிழகத்தில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *