இந்திய வீரருக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்!

கடந்த அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமையன்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாக விளையாடிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற வரலாறு முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான் அணியுடனான இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்திய வீரர்கள் பலரும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர். அதிலும் குறிப்பாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீதான ஆன்லைன் தாக்குதல்களும், வசைபாடுதல்களும் அதிகமாயின. இந்திய அணியில் ஆடும் லெவனில் இருக்கும் ஒரே முஸ்லீம் வீரர் முகமது ஷமி மட்டுமே ஆவார். முகமது ஷமி ஒரு துரோகி எனவும், அவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்திய வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக சச்சின்,சேவாக்,பதான் போன்ற இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கேப்டன் விராட் கோலியும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள், அதற்கான ஒருவரை மட்டும் குறைகூறுவது சரியல்ல என முகமது ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும், இந்தியாவிற்காக பல்வேறு தருணங்களில் சிறப்பாக பந்து வீசி பல ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முகமது ஷமிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் பேசியுள்ளார். அதில், முகமது ஷமி ஒரு சிறந்த வீரர் எனவும், அவருடைய பந்து வீச்சு சிறப்பாக உள்ளதாகவும் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். அதனால், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என ரிஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…