ராகுலுக்காக மைதானத்தில் கோபமடைந்த விராட் கோலி!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான நேற்று ரசிகர்கள் சிலர் இந்திய வீரர் கே.எல்.ராகுல் மீது பாட்டில் கார்க் மூடிகளை வீசியுள்ளது சர்ச்சையானது.

3-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய வீரர் கே.எல் ராகுல் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார். முகமது ஷமி வீசிய 69-வது ஓவரின்போது, பாட்டில் மூடி ஒன்று ராகுல் மீது வீசப்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி அதை வெளியே வீசும்படி ராகுலிடம் கூறினார்.

இதனால் நடுவர்கள் மைக்கேல் கௌ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வர்த்திடம் இந்திய வீரர்கள் இதுகுறித்து பேசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அப்போது கோலி மிகவும் கோபமாக காணப்பட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…