இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முதலில் ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் அபாரமாக விளையாடிய இந்திய அணி கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியது.

ஒருநாள் போட்டி முடிவு பெற்ற நிலையில் இந்தியா இலங்கை இடையிலான டி20 தொடர் இன்று தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

ஒருநாள் தொடரை வென்றுள்ள இளம் இந்திய அணி டி20 தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…