எங்களுக்கு தனி விமானம் அனுப்புங்க… கதறும் ஆஸ்திரேலிய வீரர்!

ஐபிஎல் 14-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனாவால் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே நிலை தொடர்கிறது.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்கள் போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். ஏற்கனவே தமிழக வீரர் அஸ்வின் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

இன்று ஆஸ்திரேலிய வீரர் கிறிஷ் லின் தற்போது ஐபிஎல்-ல் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு போட்டிகள் முடிந்தவுடன் தனிவிமானம் ஏற்பாடு செய்து தருமாறு ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். கடினமான சூழல் இருப்பது தெரிந்தே ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டோம் எனவும் மேலும் ஐபிஎல் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு 10 சதவீதம் வருமானம் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளிலில் விளையாடும் அனைத்து வீரர்களும் கடுமையான பயோ பப்புளில் இருப்பதாகவும் லின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…