இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… பொது மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மூன்றாவது அலை ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,24,74,773 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 354 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4,35,110 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,486 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,20,111 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,19,551 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *