இந்தியாவில் உயரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இன்னும் கொரோனா இரண்டாவது அலையே முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 42, 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,69,132 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 562 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,757 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,33,022 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 97.38 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தற்போது 4,10,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 1.32 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48,52,86,570 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.