இந்தியாவில் குறைந்த ஒரு நாள் பாதிப்பு

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்பு கடந்த சில வாரங்களாகக் குறைந்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

நேற்று, கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி இருந்தது. ஆனால், இன்று  30,549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,26,507 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 422 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,195 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,887 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,08,96,354 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…