இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மக்கள் கலக்கம்

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக் குறைந்து வருகிறது.

இன்று தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. அதில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,646 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,13,993 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 593 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,810 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,291 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,81,263 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,920 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 46,15,18,479 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *