தடுப்பு மருந்துகளை வீணடிப்பதில் தமிழகத்துக்கு மூன்றாம் இடம்

இந்தியாவில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 18 வயதை மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு தடுப்பு மருந்து குப்பியைத் திறக்கும் போது, அதனை 10 பேருக்குச் செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது.
இதனால், தடுப்பு மருந்துகள் அதிகமாக வீணாகிறது. இவ்வாறு தடுப்பு மருந்துகளை வீணாக்கும் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் அதிகளவு வீணாக்குகின்றன. நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது.
அந்த வகையில், அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு இடங்களில் சட்டீஸ்கர் ( 30.2 சதவீதம்), தமிழகம் (15.5 சதவீதம்), ஜம்மு – காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அதிகமாக தடுப்பூசிகளை வீணடித்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.