டெல்லியில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
தலைநகர் டெல்லியிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடர்கிறது.
டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், முழு ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், மே 31 முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.