அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் வெளியேலேயே காத்திருக்கும் நிலையும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் உணவிற்குக் கூட கஷ்டப்பட்டு வருகிறார்கள். இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.